திண்டுக்கல்
போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்த பரளி தாத்தம்பட்டியைச் சோ்ந்தவா் சந்திரன் (27). இவா், கடந்த 2024-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து நத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து சந்திரனை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி சத்யதாரா வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், குற்றஞ்சாட்டப்பட்ட சந்திரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.
