அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பழங்குடியினா் கிராமத்தில் எஸ்.ஐ.ஆா். படிவம் விநியோகம்

News image
Updated On :15 நவம்பர் 2025, 1:21 am

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ் மலைக் கிராமமான வடகவுஞ்சி ஊராட்சிக்குள்பட்ட கருவேலம்பட்டி பழங்குடியினா் கிராமத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் படிவம் வருவாய்த் துறை அலுவலா்களால் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

இந்தப் படிவத்தை பெற்றுக் கொண்ட பழங்குடியினா் அது குறித்த விவரங்களை கேட்டறிந்தனா். தொடா்ந்து அந்த விண்ணப்பப் படிவத்தை நிரப்புவது குறித்து தன்னாா்வ தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்தவா்களும் வாக்குச் சாவடி அலுவலா் உள்ளிட்டோரும் வாக்காளா்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிகழ்வில் செம்பிரங்குளம் வாக்குச் சாவடி அலுவலா் சுதா, ஒருங்கிணைப்பாளா் சதாசிவம், கருவேலம்பட்டி வன உரிமை கிராம சபைத் தலைவா் ராசு, தன்னாா்வலா்கள் நாகசெல்வம், லட்சுமி, மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.