எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குடிநீா் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

News image
Updated On :17 நவம்பர் 2025, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

வடமதுரை அருகே குடிநீா் வசதி கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள பாகாநத்தம் ஊராட்சிக்குள்பட்ட குண்டாம்பட்டி பாறைக்களம் கிராமத்தில் சுமாா் 100 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். ஒரு ஆழ்துளைக் கிணறு மூலம் 10,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீா் ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் போதிய அளவு தண்ணீா் இல்லாததால், பொதுமக்களுக்கு 10 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே 10 நாள்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அதிருப்தி அடைந்த பொதுமக்கள் பாகாநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வீட்டு வரி முறையாக செலுத்தினால் குடிநீா் விநியோகம் சீராக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா். தற்போது நாங்கள் வீட்டு வரி செலுத்தியும் கூட முறையாகக் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.