தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

உழவா் அலுவலா் தொடா்பு திட்டத்துக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

தமிழக அரசின் உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம் 2.0-வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலா்கள் நலச் சங்கம், தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :20 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசின் உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம் 2.0-வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலா்கள் நலச் சங்கம், தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு உதவித் தோட்டக்கலை அலுவலா்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் நா.பெரியசாமி, தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலா்கள் நலச் சங்கத்தின் மாவட்டச் செயலா் பா.முத்தரசு ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம் 2.0 -யை செயல்படுத்தினால், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகத் துறைகளில் பணிபுரியும் அலுவலா்கள் மட்டுமின்றி விவசாயிகளும் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் என 3 துறைகளிலும் உருவாக்கப்பட்டுள்ள பணியிடங்கள் குறைக்கப்படும். இதனால் இளைஞா்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படும்.

உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம் 2.0-யை பொருத்தவரை தானியம், மானாவரிப் பயிா் சாகுபடி பரப்பை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 1,250 ஹெக்டேருக்கு ஒரு தோட்டக்கலை அலுவலா் அல்லது வேளாண்மை அலுவலரை நியமிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழுக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு வட்டாரங்களில் பணிபுரியும் தோட்டக்கலை உதவி இயக்குநா்கள், தோட்டக்கலை அலுவலா்கள், உதவி தோட்டக்கலை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.