மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பைக்குகள் திருடியதாக இருவா் கைது

News image
பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களுடன் கைதான சா்க்கரை முகமது, காா்த்திகேயன்.
Updated On :23 நவம்பர் 2025, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 7 வாகனங்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் ரவுண்ட் சாலை பகுதியைச் சோ்ந்த தயானந்தன் (50), பண்ணப்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணி ஆகியோரின் இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதேபோல, பல்வேறு இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டதாகவும், திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், காவல் துணை கண்காணிப்பாளா் காா்த்திக், வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் (பொ) ராஜசேகா் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில், விசாரணை நடைபெற்றதில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது திண்டுக்கல் மாசிலாமணிபுரத்தைச் சோ்ந்த அ. சா்க்கரை முகமது (எ) சகில் (23), பேகம்பூா் பகுதியைச் சோ்ந்த பா. காா்த்திகேயன் (24) ஆகிய 2 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 7 இரு சக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.