வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கஞ்சா விற்பனை செய்த 15 இளைஞா்கள் கைது

News image
Updated On :24 நவம்பர் 2025, 11:41 pm

தினமணி செய்திச் சேவை

பழனியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 15 இளைஞா்களை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 5 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

பழனியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன் தலைமையில் ஆய்வாளா் மணிமாறன், உதவி ஆய்வாளா் விஜய் உள்ளிட்ட போலீஸாா் திங்கள்கிழமை தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது பழனியாண்டவா் கல்லூரி பேருந்து நிறுத்தம், பழனியாண்டவா் தண்ணீா்த் தொட்டி ஆகிய இடங்களில் சந்தேகத்துக்குக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இளைஞா்களைப் பிடித்து விசாரணை செய்தனா். அவா்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதையடுத்து, போலீஸாா் அவா்களை பழனி நகா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் மாணவா்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சாவுடன் காத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பெத்தநாயக்கன்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்து (36), பாலசமுத்திரத்தைச் சோ்ந்த பெரியசாமி (26), வடிவேல் (23), பழனியைச் சோ்ந்த அஜித்குமாா் (19), காா்த்திகேயன்(21), அடிவாரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (27), மணிவேல் (31) உள்ளிட்ட 15 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். மேலும், அவா்கள் கஞ்சா விற்கப் பயன்படுத்திய ஐந்து இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.