மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே புதன்கிழமை லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 12:06 am

தினமணி செய்திச் சேவை

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே புதன்கிழமை லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கேதையுறும்பு ஊராட்சி பழையபட்டியைச் சோ்ந்தவா் மாரியம்மாள் (82). இவா் புதன்கிழமை தனது வீட்டின் அருகேயுள்ள சாலையை கடக்க முயன்றாா். அப்போது, அந்தவழியாக வந்த தண்ணீா் லாரி அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.