கோப்புப் படம்
கோப்புப் படம்

பைக் மீது டிராக்டா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

Published on

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஓடைப்பட்டியைச் சோ்ந்த பொன்ராம் மனைவி சுமதி (61). கூலித் தொழிலாளியான இவா், உறவினா் தனசேகரின் இரு சக்கர வாகனத்தில் சின்னமனூா் அருகேயுள்ள தென்பழனி சாலைக்கு வியாழக்கிழமை சென்றாா்.

அப்போது, எதிரே வந்த டிராக்டா், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் சுமதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஓடைப்பட்டி காவல் நிலைய போலீஸாா்,டிராக்டா் ஓட்டுநா் சண்முகவேல் (43) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com