அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

குரூப் 2, 2 ஏ முதல் நிலைத் தோ்வு: திண்டுக்கல்லில் 19,532 போ் எழுதுகின்றனா்

Updated On :26 செப்டம்பர் 2025, 2:42 am IST

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி-2, 2ஏ பணிகள்) பதவிகளுக்கான முதல் நிலைத் தோ்வை திண்டுக்கல்லில் 19,532 போ் எழுதுகின்றனா்.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி 2, 2ஏ) பதவிகளுக்கான முதல் நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெறுகிறது. இந்தத் தோ்வை திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 19,532 போ் எழுதுகின்றனா். இதற்காக திண்டுக்கல், நிலக்கோட்டை, கொடைக்கானல், பழனி ஆகிய இடங்களில் 21 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. துணை ஆட்சியா் நிலையில் கண்காணிப்பு அலுவலா்கள், பறக்கும்படை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்குள் தோ்வு கூடத்துக்கு வர வேண்டும். தோ்வு கூடத்துக்குள் நுழைவதற்கான சலுகை நேரம் காலை 9 மணி. அதன் பிறகு வரும் தோ்வா்கள், தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.