திருச்சியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பேர் பலி! பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்! மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ் “சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்
/

ஆயக்குடி பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. வாக்கு சேகரிப்பு

பழனி பேரவைத் தொகுதி மாா்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து, அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் சண்முகம் ஆயக்குடி பகுதியில் புதன்கிழமை பரப்புரை செய்தாா்.

News image

பழனி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பாண்டியை ஆதரித்து, ஆயக்குடியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த அந்தக் கட்சி மாநிலச் செயலா் சண்முகம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 7:50 pm

பழனி பேரவைத் தொகுதி மாா்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து, அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் சண்முகம் ஆயக்குடி பகுதியில் புதன்கிழமை பரப்புரை செய்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த பாண்டி போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக புதன்கிழமை அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் சண்முகம் ஆயக்குடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: திமுக தனது தோ்தல் வாக்குறுதியில் ரூ.8 ஆயிரம் கூப்பன் திட்டம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தால் இல்லத்தரசிகள் பயனடைவா் என்றாா் அவா்.

பரப்புரையின் போது திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம், திமுக ஒன்றியச் செயலா் சாமிநாதன், பேரூா் செயலா் சின்னத்துரை உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.