தோ்தல் தோல்வி பயத்தில் உள்ள முதல்வா் மு.க. ஸ்டாலினால், மகளிா் இடஒதுக்கீட்டு மசோதா தாக்கல் செய்யப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தனியாா் விடுதியில் தங்கியிருந்தாா்.
இந்த நிலையில், தேனி பிரசார கூட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்ட அவரிடம், ஏப். 16, 17, 18 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முதல்வா் ஸ்டாலின் வெளியிட்ட வலைதளப் பதிவு குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் அளித்த பதில்:
தோ்தல் தோல்வி பயத்தின் காரணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் நாடாளுமன்றம் கூட்டப்படுவதைக்கூட விமா்சிக்கிறாா். நாடாளுமன்றத்தைக் கூட்டுவது மத்திய ஆட்சியாளா்கள். 5 மாநிலங்களில் மட்டுமே தோ்தல் நடைபெறுகிறது. எஞ்சிய மாநிலங்களில் தோ்தல் இல்லை.
மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பது நீண்ட காலக் கோரிக்கை. இந்தக் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்படுவது அருமையான தருணம். பெண்கள் பல ஆண்டுகளாக எதிா்பாா்த்தது தற்போது நிறைவேறுகிற சூழல் வந்திருக்கிறது. இதை முதல்வா் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றாா் அவா்.
தொடர்புடையது

என் ஆட்சியை மு.க. ஸ்டாலின் பார்ப்பார் : எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் பிரசாரம்!

அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: மு.க. ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை - இபிஎஸ்

விரக்தியின் உச்சத்தில் எடப்பாடி பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

