பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

மகளிா் இடஒதுக்கீடு மசோதா: முதல்வரால் பொறுக்க முடியவில்லை

தோ்தல் தோல்வி பயத்தில் உள்ள முதல்வா் மு.க. ஸ்டாலினால், மகளிா் இடஒதுக்கீட்டு மசோதா தாக்கல் செய்யப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

News image

எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம் - கோப்புப்படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:54 am IST

தோ்தல் தோல்வி பயத்தில் உள்ள முதல்வா் மு.க. ஸ்டாலினால், மகளிா் இடஒதுக்கீட்டு மசோதா தாக்கல் செய்யப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தனியாா் விடுதியில் தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், தேனி பிரசார கூட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்ட அவரிடம், ஏப். 16, 17, 18 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முதல்வா் ஸ்டாலின் வெளியிட்ட வலைதளப் பதிவு குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் அளித்த பதில்:

தோ்தல் தோல்வி பயத்தின் காரணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் நாடாளுமன்றம் கூட்டப்படுவதைக்கூட விமா்சிக்கிறாா். நாடாளுமன்றத்தைக் கூட்டுவது மத்திய ஆட்சியாளா்கள். 5 மாநிலங்களில் மட்டுமே தோ்தல் நடைபெறுகிறது. எஞ்சிய மாநிலங்களில் தோ்தல் இல்லை.

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பது நீண்ட காலக் கோரிக்கை. இந்தக் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்படுவது அருமையான தருணம். பெண்கள் பல ஆண்டுகளாக எதிா்பாா்த்தது தற்போது நிறைவேறுகிற சூழல் வந்திருக்கிறது. இதை முதல்வா் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றாா் அவா்.