பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பைக் மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தம்பதியா் உயிரிழந்தனா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 12:06 am IST

பழனி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தம்பதியா் உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம், காமாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (60). விவசாயி. இவரது மனைவி அம்சவள்ளி (48). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை பழனி அருகேயுள்ள பொன்னாபுரத்தில் உள்ள உறவினா் வீட்டில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றனா். பிறகு மீண்டும் இரு சக்கர வாகனத்தில் ஊா் திரும்பினா். பழனியை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டி பிரிவு அருகே சென்றபோது பின்னால் வந்த காா் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு பழனியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் செல்லும் வழியிலேயே ரவிச்சந்திரன் உயிரிழந்தாா். அம்சவள்ளிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைத்தனா். அவரும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.