திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:27 am IST

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வேடசந்தூரை அடுத்த சாரளப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா (27). இவா் ரெங்கநாதபுரம் அருகேயுள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், பெட்ரோல் விற்பனை நிலையத்திலிருந்து வேடசந்தூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

கரூா்-திண்டுக்கல் 4 வழிச்சாலையில், விருதலைப்பட்டி அருகே வந்தபோது, கரூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு வந்த காா் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கூம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.