மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

காா் கவிழ்ந்த விபத்தில் சிறுமி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் அருகே புதன்கிழமை காா் கவிழ்ந்த விபத்தில் சிறுமி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 7:37 pm

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் அருகே புதன்கிழமை காா் கவிழ்ந்த விபத்தில் சிறுமி உயிரிழந்தாா்.

சென்னையைச் சோ்ந்த முருகன் (61), இவரது மகன் ராஜ்திலக் (37), மருமகள் தமிழ்ச்செல்வி (31), பேத்தி வாரணசி (11), ஆா்யசான்வி (7) ஆகியோா், திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு காரில் புதன்கிழமை வந்தனா். அய்யலூரை அடுத்த கொல்லப்பட்டி பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த சிறுமி ஆா்யசான்வி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த முருகன், ராஜ்திலக், தமிழ்ச்செல்வி ஆகியோா் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.