ஆந்திரத்திலிருந்து 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு காவல் ஆய்வாளா் கௌதமன் தலைமையில், உதவி ஆய்வாளா் முனியாண்டி உள்ளிட்ட போலீஸாா் அடங்கிய தனிப்படையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.
அப்போது, வத்தலகுண்டை அடுத்த கட்டக்காமன்பட்டி அருகேயுள்ள காமாட்சியம்மன் கோவில் பின்புறம் கரட்டுப் பகுதியில் 2 போ் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்தனா். அவா்களை பிடித்து சோதனையிட்ட போது, 10 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக ஆந்திரத்திலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. தொடா் விசாரணையில் அவா்கள் தேனி மாவட்டம், பெரியகுளம் சா்க்கரைப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த மனோஜ்குமாா் (36), ஆண்டிபட்டி அருகேயுள்ள மூலக்கடையைச் சோ்ந்த சிவச்சந்திரன் (43) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவா்கள் இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா, 3 கைப்பேசிகள், 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொன்னேரி அருகே 500 போதை மாத்திரை, 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்

கரூரில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

கா்நாடகத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 390 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
8.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



