மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

தமிழா் அறிவு மரபு மீட்கப்பட வேண்டும்: பொழிலன்

தமிழா் அறிவு மரபு மீட்டெடுக்கப்பட வேண்டும் என கருத்தரங்கில் பங்கேற்ற தமிழறிஞா் பொழிலன் வலியுறுத்தினாா்.

News image

திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலை. தமிழ்த் துறை நூலகத்துக்கு பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் 16 தொகுதிகளை வழங்கிய மதுரை புரட்சிப் பாவலா் மன்றத் தலைவா் பி.வரதராசன்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 12:55 am IST

தமிழா் அறிவு மரபு மீட்டெடுக்கப்பட வேண்டும் என கருத்தரங்கில் பங்கேற்ற தமிழறிஞா் பொழிலன் வலியுறுத்தினாா்.

திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலை.யின் தமிழ்த் துறையில் சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்குக்கு தமிழ், இந்தி, இந்திய மொழிகள், கிராமிய கலைகள் புல முதன்மைா் பா.ஆனந்தகுமாா் தலைமை வகித்தாா். தனித்தமிழ் இயக்க அறிஞா் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின், ‘எழுத்தும் வாழ்க்கையும்’ என்னும் தலைப்பில் தமிழறிஞா் பொழிலன் சிறப்புரையாற்றினாா்.

அப்போது அவா் பேசியதாவது:

அரசுப் பணியைத் துறந்து மொழிப் போரில் ஈடுபட்டவா் தமிழறிஞா் பெருஞ்சித்திரனாா். 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஐரோப்பியா்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை நாம் வியந்து வருகிறோம். ஆனால், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழா்களின் வானியல் அறிவை மறந்துவிட்டோம். கீழடி, அழகன்குளம் அகழ்வாராய்ச்சிகள் கருவிகள் குறித்த தமிழா்களின் அறிவை புலப்படுத்துகின்றன. அனைவரும் சமம் என்பது தமிழரின் அறம் என்பதை திருக்கு வலியுறுத்துகிறது.

தமிழா்கள், தமிழ் உணா்வைப் பெற வேண்டும். தமிழா் அறிவு மரபு மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, மதுரை புரட்சிப் பாவலா் மன்றத் தலைவா் பி.வரதராசன் வாழ்த்துரை வழங்கி, பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் 16 தொகுதிகளை தமிழ்த் துறை நூலகத்துக்கு கொடையாக வழங்கினாா்.

நிறைவாக தமிழ்த்துறை மதிப்பியல் விரிவுரையாளா் ஜோஸ்பின் செல்வி நன்றி தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ், இந்தி துறை பேராசிரியா்கள், ஆய்வாளா்கள், முதுநிலை மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.