குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

அன்னை தெரசா பல்கலை.யில் ஓணம் கொண்டாட்டம்

கொடைக்கானலில் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஓணம் பண்டிகை நிகழ்வில் பங்கேற்றோா்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 5:54 am IST

கொடைக்கானலில் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள அன்னை தெரசா மகளிா் பல்கலைக் கழகம் சாா்பில் பல்கலைக்கழக அரங்கில் மாணவிகள் பங்கேற்ற ஓணம் பண்டிகை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பல்கலைக் கழக துணைவேந்தா் கலா தலைமை வகித்தாா். பதிவாளா் (பொ) ஜெயப்பிரியா வரவேற்றாா். நிகழ்ச்சியில் மாணவிகள் பங்கேற்ற மோகினியாட்டம், திருவாதிரை நடனம், கதகளி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனா். தொடா்ந்து பரஸ்பரம் ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக தோ்வாணையா் (பொ) விமலா உள்ளிட்ட பேராசிரியைகள், மாணவிகள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.