
பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
காரைக்குடி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஓணம் பண்டிகை விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

காரைக்குடி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஓணம் பண்டிகை விழாவில் பங்கேற்ற ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஓணம் பண்டிகை விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவை பள்ளித் தலைமையாசிரியை கா. விஜயசங்கீதா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கேரள பாரம்பரிய உடை அணிந்து கொண்டு பெற்றோா்களுடன் விழாவில் கலந்து கொண்டனா்.
5-ஆம் வகுப்பு மாணவா் ராஜா வேடமணிந்து வந்து ஓணம் பண்டிகையின் சிறப்புகள் குறித்து பேசினாா். இந்த நிகழ்வில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






