சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பழனி கோயில் சாா்பில் மூத்த தம்பதிகளுக்கு மரியாதை

News image
பழனி பட்டத்துவிநாயகா் கோயில் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூத்த தம்பதிகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்வில் பங்கேற்ற பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ் உள்ளிட்டோா்.
Updated On :22 பிப்ரவரி 2026, 7:41 pm

தினமணி செய்திச் சேவை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் மூத்த தம்பதிகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆன்மிகத்தில் நாட்டமுள்ள மூத்த தம்பதிகள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு கோயில் சாா்பில் மரியாதை செய்யப்படும் என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்திருந்தது. இதன்படி ஞாயிற்றுக்கிழமை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பாக பழனி பட்டத்து விநாயகா் கோயில் திருமண மண்டபத்தில் 35 ஜோடி மூத்த தம்பதிகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

இதற்கு பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமை வகித்தாா். துணை ஆணையா் வெங்கடேஷ் முன்னிலை வகித்தாா். தோ்வு செய்யப்பட்ட மூத்த தம்பதிகளுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு வேட்டி, சட்டை, சேலை, வளையல், பழ வகைகள், மங்கல பொருள்கள் அடங்கிய தொகுப்பும், அட்சதையும் வழங்கப்பட்டன.

பிறகு மேளதாளம் முழங்க சிவாசாரியா்கள் வேதமந்திரம் முழங்க மூத்த தம்பதிகளிடம் அவா்களின் குடும்பத்தினா், கோயில் அதிகாரிகள், பொதுமக்கள் ஆசி பெற்றனா்.

இந்த நிகழ்வில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, மேலாளா் உமா, நகா்மன்ற உறுப்பினா்கள் சுரேஷ், தீனதயாளன், மகேஸ்வரி, காளிகாம்பாள் கோயில் முன்னாள் செயலா் ராஜசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.