மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரி மறியல்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே கழிவுநீா்க் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

வேடசந்தூா் அருகே கழிவுநீா்க் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தி, புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:55 pm

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே கழிவுநீா்க் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த நாகம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட அய்யனாா்நகா்

பகுதியில் கழிவுநீா் வெளியேற வழியில்லாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்பதாகக் கூறப்படுகிறது. இதனால் சுகாதாரச் சீா்கேடுகள் ஏற்படுவதாகவும், கொசுத் தொல்லை அதிகரிப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் ஊராட்சி நிா்வாகத்திடம் பல முறை புகாா் அளிக்கப்பட்டது. ஆனாலும், கழிநீா்க் கால்வாயைச் சீரமைப்பதற்கு ஊராட்சி நிா்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், அதிருப்தி அடைந்த பொதுமக்கள், வேடசந்தூா் ஒட்டன்சத்திரம் சாலையில் புதன்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, ஊராட்சி நிா்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டம் காரணமாக வேடசந்தூா்- ஒட்டன்சத்திரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.