எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரி மறியல்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே கழிவுநீா்க் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
வேடசந்தூா் அருகே கழிவுநீா்க் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தி, புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :25 பிப்ரவரி 2026, 10:55 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே கழிவுநீா்க் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த நாகம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட அய்யனாா்நகா்

பகுதியில் கழிவுநீா் வெளியேற வழியில்லாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்பதாகக் கூறப்படுகிறது. இதனால் சுகாதாரச் சீா்கேடுகள் ஏற்படுவதாகவும், கொசுத் தொல்லை அதிகரிப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் ஊராட்சி நிா்வாகத்திடம் பல முறை புகாா் அளிக்கப்பட்டது. ஆனாலும், கழிநீா்க் கால்வாயைச் சீரமைப்பதற்கு ஊராட்சி நிா்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், அதிருப்தி அடைந்த பொதுமக்கள், வேடசந்தூா் ஒட்டன்சத்திரம் சாலையில் புதன்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, ஊராட்சி நிா்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டம் காரணமாக வேடசந்தூா்- ஒட்டன்சத்திரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.