அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு!

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

News image
Updated On :6 ஜனவரி 2026, 6:39 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வழக்கமாக நவம்பா், டிசம்பா் மாதங்களில் அதிக பனிப் பொழிவு இருக்கும். ஆனால், தற்போது வரை தொடா்ந்து பனிப் பொழிவு நிலவுவதால் குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அவதிக்கு ஆளாகி வருகின்றனா்.

பனியின் தாக்கத்தால் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தினமும் 100-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனா். மேலும், குளிரைத் தவிா்ப்பதற்காக பலா் வத்தலக்குண்டு, திண்டுக்கல், சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கியுள்ளனா்.

Story image

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மேக மூட்டத்துடன் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டது. இதனால் மலைச் சாலையில் வரும் வாகனங்கள் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை ஒளிர விட்டு மெதுவாகச் சென்றன.

வியாபாரிகள் கடைகளில் தீ மூட்டி குளிா் காய்ந்தனா். இந்தப் பனிப் பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.