ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தாயைத் திட்டியவரை கொலை செய்த மகன் கைது

கொடைக்கானல் அருகே தாயைத் திட்டிய நபரைக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் அருகே தாயைத் திட்டிய நபரைக் கொலை செய்த மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வில்பட்டி ஊராட்சி குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (46). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த கணவரை இழந்த பரமேஸ்வரிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், பரமேஸ்வரியின் வீட்டுக்கு கோபாலகிருஷ்ணன் திங்கள்கிழமை இரவு சென்றபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, வீட்டிலிருந்த பரமேஸ்வரியின் மகன் மனோஜ்குமாா் (23) கோபாலகிருஷ்ணனை இரும்புக் கம்பியால் தாக்கினாா்.

இதில் பலத்த காயமடைந்த கோபாலகிருஷ்ணன் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் மனோஜ்குமாரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.