தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை செய்தவா் கைது

செம்பட்டி அருகே பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

நிலக்கோட்டை: செம்பட்டி அருகே பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். 

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் சரவணன் தலைமையிலான தனிப் படை போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். 

அப்போது, ஆதிலட்சுமிபுரத்தில் பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து குட்கா, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த சரவணகுமாரை (45) போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 150 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.