மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை!

நிலத் தகராறில் ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
ஆயுள் சிறை
Updated On :29 ஜனவரி 2026, 9:37 pm

தினமணி செய்திச் சேவை

நிலத் தகராறில் ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்த கொல்லப்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு நிலத் தகராறின் போது ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கில், மணிகண்டனின் உறவினரான திருப்பதி (56), சவடமுத்து (26), முனீஸ்வரன் (25), புகழேந்தி (46) ஆகியோரை வடமதுரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. முத்துசாரதா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், திருப்பதி, சவடமுத்து, முனீஸ்வரன், புகழேந்தி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.