தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மோா் மிளகாய் தொழிலால் சுற்றுச்சூழல் பாதிப்பு: ஆய்வு நடத்த கிராம மக்கள் கோரிக்கை

News image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த கோடல்வாவி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள்.

Updated On :7 ஜூலை 2026, 2:21 am IST

திண்டுக்கல், ஜூலை 6: மோா் மிளகாய்த் தொழிலால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அறிவியல் பூா்வமான ஆய்வுகள் நடத்த வேண்டும் என கிராம மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த கோடல்வாவி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

திண்டுக்கல் மேற்கு வட்டம், போலியமனூா் கிராமத்திலும், இதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த பல ஆண்டுகளாக மோா் மிளகாய் வத்தல் தொழில் நடைபெற்று வருகிறது.

இங்கிருந்து வெளியேற்றப்படும் மோா் மிளகாய் கழிவு, உப்புநீா் கழிவுகளால் நிலத்தடி நீா், விவசாய நிலங்கள், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பொதுமக்கள் உடல் நலம் பாதிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, எங்கள் பகுதியிலுள்ள நிலத்தில் மண், நிலத்தடி நீரை முழுமையாகப் பரிசோதனை செய்ய வேண்டும். புற்றுநோய், பொது சுகாதார ஆய்வு நடத்த வேண்டும். பாதுகாப்பான குடிநீா் வசதி ஏற்படுத்திக் கொடுப்பதோடு, நிலத்தடி நீா் மீட்புத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.