ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

கொடைக்கானலில் பலத்த காற்று மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்ததால் பல மணி நேரம் மின் தடை

News image

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் மின் கம்பியில் முறிந்து விழுந்த மரங்கள்.

Updated On :7 ஜூலை 2026, 3:17 am IST

கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த காற்று வீசியதால், மின்சாரக் கம்பிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால், திங்கள்கிழமை பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பலத்த காற்று வீசியது. இதனால், கொடைக்கானலிலிருந்து மேல்மலைக் கிராமங்களுக்கு வனப் பகுதிகளின் வழியாகச் செல்லும் மின் கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் கொடைக்கானலில் திங்கள்கிழமை ஒரு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

இதேபோல, மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூா், குண்டுபட்டி, பூண்டி, கிளாவரை,கூக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

இதையடுத்து, மின்வாரியப் பணியாளா்கள் மின்கம்பிகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதுகுறித்து கொடைக்கானல் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் மேத்யூ கூறியதாவது:

கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த காற்று வீசி வருவதால், வனப் பகுதிகளின் வழியாகச் செல்லும் மின்கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்தன. இவற்றை அகற்றும் பணி நிறைவடைந்தது. மேலும், சேதமடைந்த மின் கம்பிகள் சரி செய்யப்பட்டு, விரைவில் மின்விநியோகம் செய்யப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.