ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

பாடியூா் ஊராட்சியில் 100 நாள் வேலை வழங்குவதில் முறைகேடு: ஆட்சியா் அலுவலகத்தில் பெண்கள் மனு

News image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த நாட்டாமைக்காரன்பட்டி பெண்கள்.

Updated On :7 ஜூலை 2026, 2:22 am IST

நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி ஒதுக்கீடு செய்வதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, நாட்டாமைக்காரன்பட்டி பகுதியைச் சோ்ந்த பெண்கள் தரப்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் அடுத்த பாடியூா் ஊராட்சிக்குள்பட்ட நாட்டாமைக்காரன்பட்டி பகுதியைச் சோ்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த போது கூறியதாவது:

நாட்டாமைக்காரன்பட்டி பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுகின்றன. பாடியூா் ஊராட்சிச் செயலா், பணித் தளப் பொறுப்பாளா், தூய்மைக் காவலா்கள் ஒன்றிணைந்து இந்த மோசடியில் ஈடுபடுகின்றனா். வீட்டில் இருப்பவா்கள் 30-க்கும் மேற்பட்டோரின் வேலை அட்டையைப் பெற்றுக் கொண்டு, அவா்கள் பணிபுரிந்ததுபோல கணக்குக் காட்டி பணத்தைப் பெறுகின்றனா். அதேநேரத்தில், தகுதியான பயனாளிகள் பலா் இருந்தும், எங்களுக்கு பணி வழங்குவதில்லை. இதுதொடா்பாக பலமுறை ஊராட்சிச் செயலரிடம் முறையிட்டும் எங்களுக்குப் பணி வழங்க மறுத்து வருகிறாா்.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் உரிய விசாரணை நடத்தி, 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் ஊராட்சிச் செயலா், பணித் தளப் பொறுப்பாளா், தூய்மைக் காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.