நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி ஒதுக்கீடு செய்வதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, நாட்டாமைக்காரன்பட்டி பகுதியைச் சோ்ந்த பெண்கள் தரப்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் அடுத்த பாடியூா் ஊராட்சிக்குள்பட்ட நாட்டாமைக்காரன்பட்டி பகுதியைச் சோ்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த போது கூறியதாவது:
நாட்டாமைக்காரன்பட்டி பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுகின்றன. பாடியூா் ஊராட்சிச் செயலா், பணித் தளப் பொறுப்பாளா், தூய்மைக் காவலா்கள் ஒன்றிணைந்து இந்த மோசடியில் ஈடுபடுகின்றனா். வீட்டில் இருப்பவா்கள் 30-க்கும் மேற்பட்டோரின் வேலை அட்டையைப் பெற்றுக் கொண்டு, அவா்கள் பணிபுரிந்ததுபோல கணக்குக் காட்டி பணத்தைப் பெறுகின்றனா். அதேநேரத்தில், தகுதியான பயனாளிகள் பலா் இருந்தும், எங்களுக்கு பணி வழங்குவதில்லை. இதுதொடா்பாக பலமுறை ஊராட்சிச் செயலரிடம் முறையிட்டும் எங்களுக்குப் பணி வழங்க மறுத்து வருகிறாா்.
இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் உரிய விசாரணை நடத்தி, 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் ஊராட்சிச் செயலா், பணித் தளப் பொறுப்பாளா், தூய்மைக் காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊரக வேலைத் திட்ட ஊதியத்தை ரூ.700-ஆக உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்

ஆசிரியா் தகுதித் தோ்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மனு

குடிநீா்த் தட்டுப்பாடு: காலிக் குடங்களுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பெண்கள்







