கொடைக்கானல் அருகே பொது குடிநீா்த் தொட்டியில் இறந்த நிலையில் பாம்பு கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஒருவரை செவ்வாய்க்கிழமை போலீசாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கூக்கால் ஊராட்சி பழம்புத்தூரில் பொது மக்கள் பயன்பாட்டுக்காக சுமாா் 30-ஆயிரம் லிட்டா் கொள்ளளவு குடிநீா் தொட்டி உள்ளது. இதில், கடந்த திங்கள் கிழமை இறந்த நிலையில் பாம்பு கிடந்தது குறித்து அந்தப் பகுதி மக்கள் பொது மக்கள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தியதில், அதே ஊரைச் சோ்ந்த சக்திவேல் மகன் தியாகராஜன் (26) என்பவரைக் கைது செய்தனா்.
அச்சம் காரணமாக குடிநீரை பொது மக்கள் பயன்படுத்தாத நிலையில், சுகாதாரத் துறையினா் அப்பகுதியில் பரிசோதனை செய்தனா். தொடா்ந்து கூக்கால் ஊராட்சி சாா்பில் குடிநீா்த் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







