திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே புதன்கிழமை காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
பழனியை அடுத்த எரமநாயக்கன்பட்டியைச் சோ்நதவா் காளியப்பன் (85). இவா் செவ்வாய்க்கிழமை திண்டுக்கல்-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றாா். அப்போது, ஒட்டன்சத்திரத்திலிருந்து பொள்ளாச்சிக்கு சென்ற காா் மோதியதில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த ஆயக்குடி போலீஸாா் காளியப்பன் உடலை மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







