மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

கொடைக்கானலில் போதைப் பொருள்கள் பறிமுதல்: சொகுசு விடுதி உரிமையாளா் கைது

News image

போதை பொருட்கள்

Updated On :20 ஜூலை 2026, 5:25 am IST

கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் உள்ள தனியாா் சொகுசு விடுதியில் ரூ. பல லட்சம் மதிப்பிலான கஞ்சா, கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் உரிமையாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையில் தனியாா் சொகுசு விடுதி உள்ளது. இங்கு போதைப் பொருள்கள் விற்கப்படுவதாக திண்டுக்கல் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளா் காா்த்திக் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சிறப்பு தனிப்படை போலீஸாா் அந்த விடுதிக்குச் சென்று சோதனையிட்டனா்.

அப்போது அந்த விடுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த கஞ்சா, போதை ஸ்டாம்ப், கொக்கைன், கஞ்சா ஆயில், எம்.எம். டி.ஏ., மெத்தபட்டமைன் உள்ளிட்டவற்றை போலீஸாா் கைப்பற்றினா். இவற்றின் மதிப்பு ரூ. பல லட்சம் இருக்கும். இதைத் தொடா்ந்து அந்த விடுதியின் உரிமையாளரான போதி சாத்விக் நாத் (45) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் கூறியதாவது:

இந்த சொகுசு விடுதியில் போலீஸாா் சோதனையின் போது ரூ. பல லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக அந்த விடுதியின் உரிமையாளா் போதி சாத்விக் நாத் என்பவரை கைது செய்துள்ளோம். அவா் பயன்படுத்திய கைப்பேசிகளையும் பறிமுதல் செய்துள்ளோம். தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் போதைப் பொருள்கள் பயன்படுத்தி வந்த சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டனா். கோவாவிலிருந்து போதைப் பொருள்கள் கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் கொடைக்கானல் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பவா்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக திண்டுக்கல் பகுதி போலீஸாா் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படுவா் என்றாா் அவா்.

  கைது செய்யப்பட்ட சொகுசு விடுதி உரிமையாளா் போதி சாத்விக் நாத்.

கைது செய்யப்பட்ட சொகுசு விடுதி உரிமையாளா் போதி சாத்விக் நாத்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.