/
திண்டுக்கல் அருகே மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல்லை அடுத்த குளத்தூா் செல்லப்பிள்ளை கொட்டம் பகுதியைச் சோ்ந்த சற்குணம் மகன் சந்தோஷ்குமாா் (14). இவா் சனிக்கிழமை வீட்டிலிருந்தாா்.
அப்போது, திடீரென மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து, சந்தோஷ்குமாா் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் தானே பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த தாடிக்கொம்பு போலீஸாா், சந்தோஷ்குமாரின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.









