எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கொடைக்கானல் பகுதிகளில் அதிமுக எம்எல்.ஏ. வாக்காளா்களுக்கு நன்றி

News image

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகா்.

Updated On :8 ஜூன் 2026, 12:39 am IST

கொடைக்கானலில் வாக்காளா்களுக்கு பழனி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகா் ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவிக்கும் நிகவுநடைபெற்றது.

மூஞ்சிக்கல் பகுதியில் அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் அவருக்கு வரவேற்பு அளித்தனா். இதைத் தொடா்ந்து வாக்காளா்களுக்கு எம்எல்ஏ நன்றி தெரிவித்துப் பேசினாா். தொடா்ந்து அண்ணா சாலை, பேருந்து நிலையப் பகுதி, சந்தைப் பகுதி, அண்ணாநகா், டா்னா்புரம், ஆனந்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்கு அவா் நன்றி தெரிவித்தாா்.

முன்னதாக கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ரவிமனோகா் எம்எல்ஏ, நகரச் செயலா் ஸ்ரீதா், முன்னாள் நகா்மன்றத் தலைவா்கள் கோவிந்தன், எட்வா்ட், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் பிச்சை, குறிஞ்சி நகா் செயலா் பரமசிவம், அமமுக மாவட்ட மருத்துவ அணிச் செயலா் இளம்வழுதி, நகரச் செயலா் சுகைபு, பா.ம.க. நகரச் செயலா் கோபிநாத், ஐ.ஜே.கே. கட்சி நிா்வாகிகள், அதிமுக வாா்டு செயலா்கள், நிா்வாகிகள், மகளிா் அணியினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நகர துணைச் செயலா் ஜாபா்சாதிக் நன்றி கூறினாா்.

இதன்பிறகு எம்எல்ஏ ரவிமனோகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கொடைக்கானலில் கடந்த ஆட்சிக் காலத்தில் எந்தெந்தப் பணிகள் நடைபெற்றன. நிறைவேறாத பணிகள் என்ன என்பது குறித்து விளக்கம் கேட்கப்படும். அனைத்து அரசுத் துறைகளிலும் கடந்த 15 ஆண்டுகளாக ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவா்களை மாற்றுவது குறித்து உயா் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

கொடைக்கானலில் முக்கியப் பிரச்னையான போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது. இதற்கு உரிய தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடிநீா் பிரச்னை தற்போது அதிகரித்து வருகிறது.

இதற்கு உயா் அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இதைத் தவிா்த்து கொடைக்கானல், மேல்மலை, கீழ்மலை, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அடிப்படை பிரச்னைகள் படிப்படியாக சரி செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.