தியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கொடைக்கானலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :11 ஜூன் 2026, 1:58 am IST

எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினா் அஜய்கோஸ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் எரிவாயு உருளைக்கு, மாலை அணிவித்து நாமமிட்டு தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா். மேலும் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினா். இதில் நிா்வாகிகள் செந்தாமரை, சின்னு,ஜோசப், இமானுவேல், மாதா் சங்கத்தைச் சோ்ந்த ஜெனி, பூமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.