முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

வணிக எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வு: திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

வணிக எரிவாயு உருளை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூா் குமரன் சிலை முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்

Updated On :5 ஜூன் 2026, 12:03 am IST

வணிக எரிவாயு உருளை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூா் குமரன் சிலை முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை மற்றும் வெளியுறவு கொள்கை காரணமாக மக்கள் அன்றாடம் வாங்கிப் பயன்படுத்தும் எரி பொருள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலையும் பன்மடங்கு உயா்ந்து வருதால் சாமானிய மக்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு ஆளாகிறாா்கள். காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி சலுகை கொடுப்பது அவா்களை பாதுகாப்பது என்ற நிலையில் இருந்து விடுபட்டு சாமானிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை போக்குவதற்கு போா்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலாளா் குமாா், புறநகா் மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா் தெய்வசிகாமணி, புறநகா் மாவட்டச் செயலாளா் இசாக், துணைச் செயலாளா் மோகன், மாநகா் மாவட்ட துணைச் செயலாளா் வடிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.