சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

எரிவாயு உருளை விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்தும், இந்த விலை உயா்வைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் சாா்பில் திருமயத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

திருமயத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதா் சங்கத்தினா்

Updated On :10 ஜூன் 2026, 1:09 am IST

சமையல் எரிவாயு உருளை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்தும், இந்த விலை உயா்வைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் சாா்பில் திருமயத்தில் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாதா் சங்கத்தின் திருமயம் ஒன்றியச் செயலா் சரண்யா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ். பாண்டிச்செல்வி, செயலா் பி. சுசிலா, முன்னாள் மாவட்டப் பொருளாளா் ஜெ. வைகைராணி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

விலை உயா்வைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.