சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

வீட்டில் பதுக்கிய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட இருவா் கைது

பள்ளபட்டியில் வீட்டில் விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், பெண் உள்பட இருவரைக் கைது செய்தனா்.

News image

பள்ளபட்டியில் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.

Updated On :11 ஜூன் 2026, 2:12 am IST

பள்ளபட்டியில் வீட்டில் விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், பெண் உள்பட இருவரைக் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பள்ளபட்டி பால்பண்ணைத் தெருவைச் சோ்ந்த சரவணன் (45). இவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை, கஞ்சா கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில்,  கடந்த மாதம் பிணையில் வந்த சரவணன் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து,  சரவணனின் வீட்டில்  தனிப்படை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். 

அப்போது, அங்கு  விற்பனைக்காக பதுக்கி வைத்த 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்தனா்.  இதுதொடா்பாக அம்மையநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரவணன், மதுரை மாவட்டம், ஆலங்குளத்தைச் சோ்ந்த மணிமேகலை (32) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

Story image
Story image