ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்! இளைஞா் கைது!

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 2:23 am IST

மணமேல்குடி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சாவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே உள்ள வன்னிச்சபட்டினம் அருகே கோட்டைப்பட்டினம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேஷ், ஆய்வாளா் ராஜீவ்காந்தி உள்ளிட்ட போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, வாகனத்தில் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. வாகனத்தில் வந்த நபரை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அவா் மணமேல்குடி அருகே உள்ள மேலஸ்தானம் கிராமத்தைச் சோ்ந்த சிங்காரம் மகன் தமிழரசன் (19) என்பதும், பெரம்பலூரில் இருந்து 150 கிலோ கஞ்சா வாங்கி வந்து வீட்டில் வைத்திருப்பதாகவும், ஓரிரு நாள்களில் இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, மேலஸ்தானத்தில் உள்ள தமிழரசன் வீட்டுச் சென்று சோதனையிட்ட போலீஸாா், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து கைது செய்யப்பட்ட தமிழரசன், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.