வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கொடைக்கானலில் மழை

கொடைக்கானலில் சனிக்கிழமை காலை முதல் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image

கொடைக்கானலில் சனிக்கிழமை மிதமான மழை பெய்த நிலையிலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள்.

Updated On :14 ஜூன் 2026, 12:36 am IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சனிக்கிழமை காலை முதல் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கொடைக்கானலில் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால், தற்போது, பருவநிலை மாற்றம் காரணமாக மழை பெய்யவில்லை. கடும் வெப்பம் நிலவியது. இதனால், பொதுமக்கள் பகலில் வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள்ளே முடங்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை முதலே மிதமான மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால், மலைச் சாலைகளில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாகச் சென்றன. இந்த மழை காரணமாக, கொடைக்கானல் சுற்றுலா வந்த பயணிகளின் மகிழ்ச்சி அடைந்தனா்.

மேலும், இந்த மழையையும் பொருள்படுத்தாமல் சுற்றுலாத் தலங்களான வெள்ளிநீா் அருவி, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர்ராக், குணாகுகை, பிரையண்ட் பூங்கா, கோக்கரஸ்வாக் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப் பாா்த்தனா். மேலும், நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனா்.