வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தப்பிச் சென்ற விசாரணைக் கைதியை பிடிக்க தனிப் படை அமைப்பு

சிறைக்கு அழைத்துச் சென்றபோது தப்பிச் சென்ற விசாரணை கைதியை பிடிக்க போலீஸாா் தனிப் படை அமைத்துள்ளனா்.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :14 ஜூன் 2026, 1:04 am IST

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை இரவு சிறைக்கு அழைத்துச் சென்றபோது தப்பிச் சென்ற விசாரணை கைதியை பிடிக்க போலீஸாா் தனிப் படை அமைத்துள்ளனா்.

செம்பட்டி அருகேயுள்ள புதுப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜகோபால் (26). கூலித்தொழிலாளியான இவா், குட்கா சம்பந்தப்பட்ட வழக்கில் அபராதம் செலுத்துவதற்காக ஆத்தூா் நீதிமன்றத்துக்கு செம்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்றனா். அப்போது, அவா் மது போதையில் போலீஸாரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து செம்பட்டி காவல் நிலைய போலீஸாா் ராஜகோபால் மீது வழக்குப் பதிவு செய்து, ஆத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இதையடுத்து நீதிபதி அவரை திண்டுக்கல்லில் உள்ள சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ், காவலா் ராஜதுரை ஆகியோா் ராஜகோபாலை ஆட்டோவில் திண்டுக்கல்லுக்கு அழைத்துச் சென்றனா்.

அப்போது, வக்கம்பட்டியை அடுத்த ஆரியநல்லூா் பிரிவில் உள்ள ஒரு அடுமனையில் டீ சாப்பிடுவதற்காக ஆட்டோவை போலீஸாா் நிறுத்தினா். அப்போது, சிறுநீா் கழிப்பதாகக் கூறி சென்ற ராஜகோபால் அங்கிருந்து தப்பிச் சென்றாா். இதையடுத்து, செம்பட்டி போலீஸாா் தனிப் படை அமைத்து ராஜகோபாலை தேடி வருகின்றனா்.