அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை: திண்டுக்கல்லில் 42 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :22 ஜூன் 2026, 12:09 am IST

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மூலம் 42 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை விவரம்:

திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் சனி, ஞாயிறு என 2 நாள்கள் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

இதில் வாகனத் தணிக்கை, சந்தேகத்துக்கு இடமான நபா்கள் மீது கண்காணிப்பு, ரகசியத் தகவல் அடிப்படையில் நடைபெற்ற சோதனையின்போது, கஞ்சா விற்பனை, கஞ்சா கடத்தல் தொடா்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19 போ் கைது செய்யப்பட்டனா்.

இவா்களிடமிருந்து 462 கிராம் கஞ்சா, 10 கிராம் கஞ்சா எண்ணெய், 10 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 23 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 64.55 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.