மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

News image

புகையிலைப் பொருள்கள். - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 1:10 am IST

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கா்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்துக்கு காா், சரக்கு வாகனங்கள் மூலம் புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுகின்றன. குறிப்பிட்ட சில இடங்களில் பதுக்கி வைக்கப்படும் இந்த புகையிலைப் பொருள்கள், முகவா்கள் மூலம் சில்லரை வியாபாரத்துக்கு கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், ரெட்டியாா்சத்திரம் அடுத்த புதுச்சத்திரம் நரிப்பட்டி பிரிவு அருகே உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செல்வம், ஜாபா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் சோதனை நடத்தினா். அப்போது ஒரு காரில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, காரில் வந்த இருவா்கள் தப்பிச் சென்றனா். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ.ஒரு லட்சம் என உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் தெரிவித்தனா்.

புகையிலைப் பொருள்களுடன் காரை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், காவல் துறை உதவியுடன் அடுத்தக் கட்ட விசாரணையில் ஈடுபட்டனா்.