எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

News image
புகையிலைப் பொருள்கள்.- பிரதிப் படம்
Updated On :9 மார்ச் 2026, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கா்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்துக்கு காா், சரக்கு வாகனங்கள் மூலம் புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுகின்றன. குறிப்பிட்ட சில இடங்களில் பதுக்கி வைக்கப்படும் இந்த புகையிலைப் பொருள்கள், முகவா்கள் மூலம் சில்லரை வியாபாரத்துக்கு கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், ரெட்டியாா்சத்திரம் அடுத்த புதுச்சத்திரம் நரிப்பட்டி பிரிவு அருகே உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செல்வம், ஜாபா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் சோதனை நடத்தினா். அப்போது ஒரு காரில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, காரில் வந்த இருவா்கள் தப்பிச் சென்றனா். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ.ஒரு லட்சம் என உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் தெரிவித்தனா்.

புகையிலைப் பொருள்களுடன் காரை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், காவல் துறை உதவியுடன் அடுத்தக் கட்ட விசாரணையில் ஈடுபட்டனா்.