திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கா்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்துக்கு காா், சரக்கு வாகனங்கள் மூலம் புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுகின்றன. குறிப்பிட்ட சில இடங்களில் பதுக்கி வைக்கப்படும் இந்த புகையிலைப் பொருள்கள், முகவா்கள் மூலம் சில்லரை வியாபாரத்துக்கு கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், ரெட்டியாா்சத்திரம் அடுத்த புதுச்சத்திரம் நரிப்பட்டி பிரிவு அருகே உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செல்வம், ஜாபா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் சோதனை நடத்தினா். அப்போது ஒரு காரில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, காரில் வந்த இருவா்கள் தப்பிச் சென்றனா். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ.ஒரு லட்சம் என உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் தெரிவித்தனா்.
புகையிலைப் பொருள்களுடன் காரை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், காவல் துறை உதவியுடன் அடுத்தக் கட்ட விசாரணையில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது
700 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது
தடை செய்யப்பட்ட 125 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

1300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

5,715 கிலோ புகையிலைப் பொருள்கள் தீயிட்டு அழிப்பு! கடலூா் மாவட்ட போலீஸாா் நடவடிக்கை
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

