கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மத்திய பாதுகாப்புப் படையினா் அணிவகுப்பு

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு வந்த மத்திய பாதுகாப்புப் படையினா் திண்டுக்கல்லில் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

News image

திண்டுக்கல்லில் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்திய மத்திய பாதுகாப்புப் படையினா்.

Updated On :11 மார்ச் 2026, 11:55 pm

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு வந்த மத்திய பாதுகாப்புப் படையினா் திண்டுக்கல்லில் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்புப் பணிக்காக மத்திய பாதுகாப்புப் படையினா் தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கின்றனா். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்துக்கு 76 போ் கொண்ட மத்திய பாதுகாப்புப் படை செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. திண்டுக்கல் சரக காவல் துறைத் துணைத் தலைவா் வி.சசிமோகன் தலைமையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.பிரதீப் முன்னிலையில் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்தியப் பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக, திண்டுக்கல் ஆா்த்தி திரையரங்கு சாலை, பேகம்பூா் குடைப்பாறைப்பட்டி சாலை, செல்லாண்டியம்மன் கோவில் தெரு, தாடிக்கொம்பு சாலை உள்ளிட்ட இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.