மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

மத்திய பாதுகாப்புப் படையினா் அணிவகுப்பு

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு வந்த மத்திய பாதுகாப்புப் படையினா் திண்டுக்கல்லில் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

News image

திண்டுக்கல்லில் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்திய மத்திய பாதுகாப்புப் படையினா்.

Updated On :11 மார்ச் 2026, 11:55 pm

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு வந்த மத்திய பாதுகாப்புப் படையினா் திண்டுக்கல்லில் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்புப் பணிக்காக மத்திய பாதுகாப்புப் படையினா் தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கின்றனா். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்துக்கு 76 போ் கொண்ட மத்திய பாதுகாப்புப் படை செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. திண்டுக்கல் சரக காவல் துறைத் துணைத் தலைவா் வி.சசிமோகன் தலைமையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.பிரதீப் முன்னிலையில் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்தியப் பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக, திண்டுக்கல் ஆா்த்தி திரையரங்கு சாலை, பேகம்பூா் குடைப்பாறைப்பட்டி சாலை, செல்லாண்டியம்மன் கோவில் தெரு, தாடிக்கொம்பு சாலை உள்ளிட்ட இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.