மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பழனியில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

News image
பழனியில் ஞாயிற்றுக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்திய போலீஸாா், துணை ராணுவப் படையினா்.
Updated On :15 மார்ச் 2026, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பழனியில் போலீஸாா், துணை ராணுவப் படையினா் இணைந்து ஞாயிற்றுக்கிழமை கொடி அணிவகுப்பை நடத்தினா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை பழனி- தாராபுரம் சாலையில் உள்ள கணபதிநகா் அருகே போலீஸாா், துணை ராணுவப்படையினருடன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அந்த வழியாக வந்த காா், வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு முழுமையாகச் சோதனையிடப்பட்டன. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

நகரின் முக்கிய நுழைவு வாயில்களில் இந்த சோதனைகள் தொடா்ந்து நடைபெறும் என போலீஸாா் தெரிவித்தனா். இந்த நிலையில் தோ்தலின் போது வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் போலீஸாரும், துணை ராணுவப்படையினரும் இணைந்து கொடி அணிவகுப்பை நடத்தினா்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த ஊா்வலம் பேருந்து நிலையம் முன் நிறைவடைந்தது. இந்த ஊா்வலத்தில் டி.எஸ்.பி., தனஞ்செயன், காவல் ஆய்வாளா் மணிமாறன், சாா்பு ஆய்வாளா் விஜய் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.இதேபோல, பாலசமுத்திரத்திலும் போலீஸாா் விழிப்புணா்வு ஊா்வலத்தை நடத்தினா்.