நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரயில் சுரங்கப்பாதையை சீரமைக்கக் கோரிக்கை

பழைய ஆயக்குடி நந்தவனப்பட்டியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிக் கிடக்கும் மழைநீா்.

News image

பழைய ஆயக்குடி நந்தவனப்பட்டியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிக் கிடக்கும் மழைநீா்.

Updated On :20 மார்ச் 2026, 6:48 pm

தினமணி செய்திச் சேவை

பழனி அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரை அகற்ற பேரூராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் புதன்கிழமை காற்றுடன் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. பல ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெல்பயிா்கள், முருங்கை தோட்டங்கள் சேதமடைந்தன. பழைய ஆயக்குடி நந்தவனப்பட்டியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீா் குளம்போல தேங்கியது.

இந்தத் தண்ணீா் அகற்றப்படாததால் கடும் துா்நாற்றம் வீசி வருகிறது. இதனால், நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த வழியாக வாகனங்கள், பொதுமக்கள் செல்லமுடியாததால், கடவுப்பாதையை பாதுகாப்பின்றி கடந்து செல்கின்றனா்.

எனவே, ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை உடனடியாக ஆயக்குடி பேரூராட்சி நிா்வாகத்தினா் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.