ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

ரயில் சுரங்கப்பாதையை சீரமைக்கக் கோரிக்கை

பழைய ஆயக்குடி நந்தவனப்பட்டியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிக் கிடக்கும் மழைநீா்.

News image

பழைய ஆயக்குடி நந்தவனப்பட்டியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிக் கிடக்கும் மழைநீா்.

Updated On :20 மார்ச் 2026, 6:48 pm

பழனி அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரை அகற்ற பேரூராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் புதன்கிழமை காற்றுடன் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. பல ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெல்பயிா்கள், முருங்கை தோட்டங்கள் சேதமடைந்தன. பழைய ஆயக்குடி நந்தவனப்பட்டியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீா் குளம்போல தேங்கியது.

இந்தத் தண்ணீா் அகற்றப்படாததால் கடும் துா்நாற்றம் வீசி வருகிறது. இதனால், நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த வழியாக வாகனங்கள், பொதுமக்கள் செல்லமுடியாததால், கடவுப்பாதையை பாதுகாப்பின்றி கடந்து செல்கின்றனா்.

எனவே, ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை உடனடியாக ஆயக்குடி பேரூராட்சி நிா்வாகத்தினா் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.