வாக்குச்சாவடி மையங்களை தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு
பழனியில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்கள், தோ்தல் பணிகள் குறித்து பொதுப் பாா்வையாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.


பழனியில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்கள், தோ்தல் பணிகள் குறித்து பொதுப் பாா்வையாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மாவட்ட தோ்தல் அலுவலா் தலைமையில் ஆயத்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
வாக்காளா்களுக்கு பரிசு, பணம் போன்றவை விநியோகம் செய்வதை தடுப்பதற்காக பறக்கும் படை குழுவினா் ஆங்காங்கே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதற்கிடையே, வாக்குச் சாவடி மையங்கள் அமைப்பு, பதற்றமான வாக்குச் சாவடிகள், அரசியல் கட்சியினரின் செலவுகளை கண்காணிப்பது போன்ற பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலா், தோ்தல் பாா்வையாளா் தலைமையிலான அலுவலா்கள் செய்து செய்கின்றனா்.
இந்த நிலையில், பழனிக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான பொதுப் பாா்வையாளா் தினேஷ் ஜெயின் வெள்ளிக்கிழமை வந்தாா்.
பினனா், பழனியில் வாக்காளா்களுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகள், இவை அமைந்துள்ள பள்ளி வளாகங்களை அவா் பாா்வையிட்டாா். தொடா்ந்து, தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினரின் பணிகளையும் கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின்போது பழனி கோட்டாட்சியா் கண்ணன், நகராட்சி ஆணையா் டிட்டோ, அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...