கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

குஜிலியம்பாறை அருகே கோழிக் கழிவுகளால் சுகாதாரக்கேடு

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே சாலையோரமாக கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

News image

குஜிலியம்பாறை அருகே சாலையோரமாக வீசப்படும் கோழி இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள்.

Updated On :21 மார்ச் 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே சாலையோரமாக கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குஜிலியம்பாறையில், கரூா் பிரதான சாலையில் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி மின் பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் அருகில், திண்டுக்கல்- கரூா் பிரதான சாலையோரம் கடந்த சில நாள்களுக்கு முன்பு குப்பைகள் கொட்டப்பட்டன. இதைத் தடுப்பதற்கு உள்ளாட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில், கோழி இறைச்சிக் கழிவுகளையும் கொட்டிச் செல்கின்றனா். இதனால் அந்தப் பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுவதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மட்டுமன்றி, மின்வாரிய அலுவலக ஊழியா்களும் பாதிப்படைகின்றனா். மேலும் கோழி இறைச்சிக்காக நாய்கள் அந்த பகுதியில் முகாமிடுவதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயமும் உள்ளது.

சுகாதாரக்கேடுகளால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவுவதற்கும் வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாளையம் பேரூராட்சி நிா்வாகம் உடனடியாக குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.