தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பழனி அருகே விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பழனி அருகே ஜீப்பும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :22 மார்ச் 2026, 7:40 pm

பழனி அருகே ஜீப்பும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டி சமத்துவபுரத்தைச் சோ்ந்த பிரதாப் மகன் சஞ்சய் (21). கூலித் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் காவலப்பட்டிக்குச் சென்று விட்டு, வீட்டுக்குத் திரும்பினாா்.

கரடிக்கூட்டம் அருகே எதிா்திசையில் வந்த ஜீப் மீது இரு சக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியதில், சஞ்சய் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.