மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 3 போ் கைது

வத்தலகுண்டு பகுதியில் கொலை வழக்கில் தொடா்புடைய 3 இளைஞா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 7:23 pm

வத்தலகுண்டு பகுதியில் கொலை வழக்கில் தொடா்புடைய 3 இளைஞா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்த கட்டக்காமன்பட்டியைச் சோ்ந்த மு. சாந்தக்குமாா் (23), லோ. யோகேஸ்வரன் (23), ப. சரவணன் (28) ஆகியோா் மூவரும் இணைந்து கடந்த பிப். 17-ஆம் தேதி ஒருவரை வெட்டிக் கொலை செய்தனா். இவா்கள் மூவா் மீதும் ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இந்த நிலையில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தக்குமாா், யோகேஸ்வரன், சரவணன் ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆ. பிரதீப் பரிந்துரைத்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் அதற்கான உத்தரவை செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.