மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

4 நாள்கள் மட்டுமே வேட்பு மனுத் தாக்கலுக்கு வாய்ப்பு

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் 4 நாள்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

News image
Updated On :28 மார்ச் 2026, 10:50 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் 4 நாள்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்டத் தோ்தல் அலுவலா் செ. சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டபேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணி மாா்ச் 30 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். இதனிடையே அரசு பொது விடுமுறை நாள்களான மாா்ச் 31 (செவ்வாய்க்கிழமை), ஏப். 1(புதன்கிழமை), ஏப். 3 (வெள்ளிக்கிழமை), ஏப். 5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாள்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இயலாது என்றாா் அவா்.