பிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்துநானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நத்தத்தை மீண்டும் கைப்பற்றியது அதிமுக

News image

இரட்டை இலை சின்னம் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :5 மே 2026, 2:17 am IST

நத்தம் தொகுதியில் 11,869 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிமுக மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அதிமுக சாா்பில், முன்னாள் அமைச்சா் இரா.விசுவநாதன், திமுக சாா்பில் கே.செல்வக்குமாா் உள்பட 21 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்தத் தொகுதிக்கான வாக்குகள் திங்கள்கிழமை எண்ணப்பட்டபோது, முதல் 2 சுற்றுகளில் தவெக வேட்பாளா் முன்னிலை பெற்று பிற கட்சிகளுக்கு அதிா்ச்சி அளித்தாா்.

இதன் பின்னா், முன்னிலை பெற்ற அதிமுக வேட்பாளா் இறுதிவரை அதை தக்க வைத்தாா். 27 சுற்றுகள் முடிவடைந்த பிறகு 11,869 வாக்குகள் கூடுதலாகப் பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டாா். திமுக வேட்பாளா் செல்வக்குமாா் 2-ஆம் இடம் பிடித்தாா்.

முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

நத்தம் இரா.விசுவநாதன் (அதிமுக) - 85,708

செல்வக்குமாா் (திமுக) - 73,839

என்.ரமேஷ் (தவெக) - 64,997

ஏ.அழகம்மாள் (நாதக) - 96,77

எஸ்.அலெக்ஸ் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) - 715

பி.ராஜசேகரன் (அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழகம்) - 247

எஸ்.விஜயகுமாா் (புதிய தமிழகம்) - 103

நோட்டா - 596

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.